உலக கிளைக்​கோமா வாரத்​தையொட்டி சென்​னை​யில் மார்ச் 31 வரை இலவச கண் அழுத்த பரிசோதனை

3 hours ago 1

சென்னை: உலக கிளைக்​கோமா வாரத்தை முன்​னிட்டு சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்​துவ பரிசோதனை செய்யப்​படு​கிறது. கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. உலக கிளைக்​கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15-ம் தேதி வரை கடைபிடிக்​கப்​படு​கிறது. ‘எதிர்​காலத்தை தெளி​வாக காணுங்​கள்’ என்​பதே இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள்.

கண் அழுத்த நோய் பாதிப்பை ஆரம்​பத்​திலேயே கண்​டறிந்து சிகிச்சை பெற்​றால், பார்வை திறன் குறைவதை தடுக்க முடி​யும். அலட்​சி​ய​மாக இருந்​தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்​படக்​கூடும் என மருத்​து​வர்​கள் எச்​சரிக்​கின்​றனர். இந்​நிலை​யில், சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31-ம் தேதி வரை இலவச கண் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

Read Entire Article