உயர்கல்வி நிறுவனங்களை சிறுநகரங்களிலும் உருவாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்

5 hours ago 3

சென்னை ,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்த உயர்கல்வியை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எல்லோருக்கும் சென்று சேர திட்டங்களை தீட்டினார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில், மாநகரங்களில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை சிறுநகரங்களிலும் உருவாக்கி வருகிறது நம் திராவிட மாடல் அரசு.

அந்த வகையில், முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், வேலூர் மாவட்டம் - கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் செயல்பாட்டினை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்கள். இந்த சிறப்புக்குரிய நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.

மேலும், வேலூர் சேர்க்காட்டில் ரூ.36.18 கோடி மதிப்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள குடியிருப்பையும் இன்று திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு உயர்கல்வியிலும் இந்தியாவுக்கு வழிகாட்டட்டும்.நம் மாணவர்கள் கல்வியால் உலகை வெல்லட்டும். என தெரிவித்துள்ளார் .

Read Entire Article