உயர் நீதிமன்ற இடைக்கால தடையால் 66 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நிறுத்திவைப்பு

1 week ago 4

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே மேல்​பாக்கம் கிராமத்​தில் வனத்​துறைக்கு சொந்​தமான நிலத்தை ஆக்கிரமித்​துள்ள 66 வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதி​மன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்​தனர். திரு​வள்​ளூர் மாவட்டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள மேல்​பாக்கம் கிராமம் ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்டது.

இங்கு வனத்​துறைக்கு சொந்​தமாக உள்ள சுமார் 70 ஏக்கர் நிலத்​தில் பெரும்​பகு​தியை ஆக்கிரமித்து 66 வீடுகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. சுமார் 30 ஆண்டு​களுக்கு மேலாக ஆக்கிரமித்​துள்ள இந்த வீடுகளை அகற்ற வேண்​டும் என, கடந்த 2023-ம் ஆண்டு தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

Read Entire Article