கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மேல்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள 66 வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதிமன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மேல்பாக்கம் கிராமம் ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.
இங்கு வனத்துறைக்கு சொந்தமாக உள்ள சுமார் 70 ஏக்கர் நிலத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து 66 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ள இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என, கடந்த 2023-ம் ஆண்டு தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.