உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

4 hours ago 2

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Read Entire Article