உத்தர பிரதேசம்; கார்-பைக் மோதி விபத்து - இருவர் பலி

7 hours ago 5

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் எட்டாவா பாரூக்காபாத் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த மோகன் பால் (19) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதில் படுகாயமடைந்த இரண்டு பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்க்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சைபாயில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article