உதயநிதியின் நியமனம் எதைக் காட்டுகிறது? - கடம்பூர் ராஜு கருத்து

6 months ago 51

கோவில்பட்டி: உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் திமுகவில் வாரிசு அரசியல் நடப்பது நிரூபணமாகி விட்டது என்று அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு கூறினார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை 45 நிமிடம் சந்தித்தபோது முதல் அரை மணி நேரம்மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசியதாக வெளிப்படையாக கூறியுள்ளனர். ஆனால், கடைசி 15 நிமிடங்கள் தலைமை செயலாளர் உள்ளிடோரை அனுப்பிவிட்டு, முதல்வர், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் மட்டும் பிரதமரிடம் பேசியுள்ளனர் என்றால், அது அரசியல் சம்பந்தமாகத் தான் இருக்கும்.

Read Entire Article