உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

3 hours ago 3

சென்னை ,

கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு பல வண்ண மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பெரும்புலவர் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் பாடிய மலர்களை, மலர்மாரி பொழிகின்றேன் என முத்தமிழறிஞர் கலைஞர் சங்கத்தமிழில் சொல்லியது சிந்தையில் தோன்ற, உதகை 127-ஆவது மலர்க்காட்சியைத் தொடங்கி வைத்தேன்.உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது!இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article