உடையார்பாளையத்தில் தமிழ்நாடு தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் கருத்தரங்கம்

6 months ago 19

 

ஜெயங்கொண்டம், நவ.17: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில் ஆரியமும், தமிழும், திராவிடமும், தமிழும் தமிழ் தேசியமும் என்ற தலைப்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் கருத்தரங்கம் சோ விக்டர் தலைமை வகித்தார். முன்னதாக தமிழ் களம் இளவரசன் வரவேற்று பேசினார். முன்னதாக உடையார்பாளையம் ஆசிரியர் தியாகி வேலாயுதத்தின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தை அரங்கநாடன் தொடக்கி வைத்தார்.முனைவர் காப்பியன் நூல் வெளியிட அதனை கவிஞர் அன்புச்சித்திரன் பெற்றுக் கொண்டார். சின்னப்ப தமிழன், துரை வேலுசாமி, செந்தில், கரிகாலன், பகவத்சிங், உள்ளிட்டோர் தமிழ் பற்றிய கருத்துக்களை வழங்கினர். முன்னதாக ஏர் உழவர் சங்க நிறுவனரும் தமிழர் நீதி கட்சி தலைவருமான சுபா இளவரசன் நிறைவுரை நிகழ்த்தினார்.இதில் சிறப்பாக கண்ணதாசன் பாரிவள்ளால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியர் சிகோ நன்றி கூறினார்.

The post உடையார்பாளையத்தில் தமிழ்நாடு தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article