உடுமலை அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் புறக்கணிப்பா?

8 months ago 48

உடுமலை: உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலைய பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அசோக ஸ்தூபி, ஜல்லிக்கட்டு காளை சின்னம், நீரூற்று, பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிலை திறப்பு விழா கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த விழா தொடர்பான அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜின் பெயர் இடம் பெறவில்லை.

Read Entire Article