உடலில் காயங்களுடன் டிரைவர் சடலமாக மீட்பு: நரிக்குடி போலீசார் விசாரணை

3 hours ago 4

 

திருச்சுழி, மே 25: நரிக்குடி அருகே, உடலில் காயங்களுடன் டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நரிக்குடி அருகே உள்ள கணையமறித்தானை சேர்ந்தவர் கணேசன்(45). இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள செங்கல் சூளையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தேளி கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளைக் காண சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேளி நிழற்குடைக்குள், உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் அவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post உடலில் காயங்களுடன் டிரைவர் சடலமாக மீட்பு: நரிக்குடி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article