உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வுடன் தமிழகத்தை தலைநிமிர செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

8 months ago 24

சென்னை: நாம் எல்லோரும் உடன்பிறப்புகள் என்ற பாச உணர்வோடு, தமிழகத்தைத் தொடர்ந்து தலைநிமிரச் செய்வோம் என திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி சார்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டி நிறைவு பெற்ற நிலையில், அதற்கான பரிசளிப்பு விழா நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவர் பரிசு பெற்றவர்களுடன் அண்ணா அறிவாலயம் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Read Entire Article