மதுரை: உசிலம்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் உடல் இன்று (மார்ச் 29) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் முத்துக்குமார் (36).உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளரின் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். தற்செயல் விடுப்பில் இருந்தவர், மார்ச் 27-ம் தேதி தனது நண்பர் ராஜாராம் என்பவருடன் சேர்ந்து நாவார்பட்டியிலுள்ள அரசு மதுபானக் கடைக்குச் சென்றார். அங்கு, ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த தேனி, உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 5 நபர்களுக்கும், தலைமைக் காவலர் முத்துக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த ரோந்து போலீஸார் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.