புதுடெல்லி: சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்களைக் கட்டியுள்ளதாக ஈஷா யோகா மையத்துக்கு எதிராக 2 ஆண்டுகள் கழித்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2022 டிசம்பரில் ரத்து செய்து உத்தரவிட்டது.