ஈரோட்டிற்கு ரயில் மூலம் 1,000 டன் நெல் மூட்டை வந்தது

2 months ago 9

ஈரோடு, நவ. 14: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரயிலில் 1,000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு வந்தடைந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் இருந்து 1,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த, நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. பின்னர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொது விநியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டிற்கு ரயில் மூலம் 1,000 டன் நெல் மூட்டை வந்தது appeared first on Dinakaran.

Read Entire Article