
சென்னை,
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (08311), வரும் 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து சம்பல்பூர் வரும் சிறப்பு ரெயில் (08312), வரும் 4-ந்தேதி முதல் மே 2-ந்தேதி வரையில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.