ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பெரும் போரை மூளச்செய்யும் பொறுப்பற்ற செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

12 hours ago 6

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசிப் பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இதனைக் கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள்பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும், இனி வேண்டாம் போர்கள்.  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பெரும் போரை மூளச்செய்யும் பொறுப்பற்ற செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article