ஈரானில் உள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை

4 hours ago 2

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இஸ்ரேல்-ஈரான் இடையே தற்போது போர் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஈரான் நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. இதற்கென்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 011 24193300 என்ற தொலைபேசி எண்ணிலும், 9289516712 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்.

அதாவது இந்தியாவுக்குள் என்றால் 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடு என்றால் 91 8069009901, 08069009901, 91 8069009900, 08069009900 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள வேண்டும். மேலும், [email protected] / [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article