திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74) உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார்.
திருநெல்வேலியில் எம்.சுப்பிரமணிய பிள்ளை, எம்.சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி முத்து பிறந்தார். திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது பெயருக்கு முன்னால், 'நெல்லை' என்று ஊர் பெயரை சேர்த்துக்கொண்டார்.