இளம்பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புகார் தவறானது: தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு 

4 months ago 17

சென்னை: சென்னையில் இளம்பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புகார் தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண் சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

Read Entire Article