இல்ல... ஆனா இருக்காரு..! - பதவி இழந்தாலும் பவர் காட்டும் பொன்முடி!

15 hours ago 5

பேசக்கூடாததைப் பேசி திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தைப் பறிகொடுத்த பொன்முடி, நீதிமன்ற நெருக்கடியால் மந்திரி என்ற மகுடத்தையும் இழந்தார். ஆனாலும், தன்னை மீறி தனது எல்லைக்குள் யாரும் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கும் பொன்முடி, இப்போது இலாகா இல்லாத அமைச்சர் போலவே வலம் வருவதாக ஆளும் கட்சியினரே அறிக்கை வாசிக்கிறார்கள்.

த​விர்க்க முடி​யாத நிர்​பந்​தத்​தின் காரண​மாக பொன்​முடியை அமைச்​சர் பதவியி​லிருந்து நீக்​கி​னாலும் விழுப்​புரம் மாவட்​டத்​துக்கு புதிய அமைச்​சர், பொறுப்பு அமைச்​சர் என யாரை​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நியமிக்​க​வில்​லை. இந்த நிலை​யில், அண்​மை​யில் தேர்​தல் பணி​களை கவனிக்க மண்ட பொறுப்​பாளர்​களை அறி​வித்த போது அமைச்​சர் எ.வ.வேலு விழுப்​புரம் மாவட்​டத்​துக்கு மண்​டலப் பொறுப்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டார். இதையடுத்​து, பொன்​முடிக்கு போட்​டி​யாக இன்​னொரு அமைச்​சர் மாவட்​டத்​துக்​குள் அதி​காரம் செய்ய வரு​வதைக் கொண்​டாடித் தீர்த்த பொன்​முடி எதிர்ப்​பாளர்​கள், வேலுவை வரவேற்று சுவர் விளம்​பரங்​களை தீட்​டி​னார்​கள். அதி​லும் சிலர் அரசி​யல் செய்​தார்​கள்.

Read Entire Article