இலங்கை கடற்படையின் அடாவடி செயல்களை தடுக்க மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

4 months ago 16

சென்னை: ‘வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு கைதாகி உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Read Entire Article