இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது: கைதான 23 பேரும் சிறையில் அடைப்பு

6 months ago 19

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியதால் மீனவர்கள் சோகமடைந்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9ம் தேதி மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களை மூன்று படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த போது, ரோந்து கப்பல் மோதியதில் சுவிட்டர் ராஜாவின் விசைப்படகில் கடல்நீர் புகுந்து மூழ்கியது.

படகில் இருந்த மீனவர்களை மீட்டு இலங்கை கடற்படை கைது செய்தது என தப்பி வந்த மீனவர் விஜய் (43) தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் நேற்று மாலை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், வரும் 25ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுவிக்க வலியுறுத்தி இன்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் பாம்பன் சாலை பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

The post இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியது: கைதான 23 பேரும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article