இலங்கை அதிபர் இந்தியா வருகை தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை

6 months ago 19

சென்னை: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரை தமிழக அதிகாரிகள் சந்தித்து, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்: இலங்கை அதிபர் திசைநாயகா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமரையும், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழக அதிகாரிகள் இலங்கை அதிபரை சந்திக்க வேண்டும்.

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவோடு இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையாலும், காவல் துறையாலும் தமிழக மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தமிழர்களது மீன்பிடி வலையை கிழித்தும், படகுகளை சேதப்படுத்தியும் இருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு விடுதலை கிடைக்க, தமிழக அரசு டெல்லி சென்று இலங்கை அதிபரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இலங்கை அதிபர் இந்தியா வருகை தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article