சென்னை: பணம் செலுத்தும் கருவி பழுதடைந்துள்ளதால், காசிமேட்டில் மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படும் டீசலுக்கு உரிய பணத்தை மின்னணு முறையில் செலுத்த முடியாமல் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சினைக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் பீ.ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 'சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் , சுமார் 1,500-க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளும், மத்திய, மாநில அரசுகள் வழங்கக் கூடிய டீசலை பயன்படுத்தி வருகின்றன.