இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்

2 hours ago 2

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மதியம் 12:01 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

EQ of M: 3.3, On: 15/10/2024 12:01:38 IST, Lat: 31.74 N, Long: 76.86 E, Depth: 5 Km, Location: Mandi, Himachal Pradesh. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/qssusPic0Z

— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2024
Read Entire Article