
ஆமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களல் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது.
அந்த அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், போட்டி முடிந்ததும் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோடி அளித்த பேட்டியின்போது, என்ன விசயம் நடந்தபோதும், இந்த அணிக்கு விசுவாசத்துடன் இருந்திருக்கிறேன். வேறு விதத்தில் நினைத்த தருணங்களும் உண்டு. ஆனால், இந்த அணியிலேயே விளையாடினேன்.
பெங்களூரு அணியுடனேயே என்னுடைய மனம், ஆன்மா இருக்கும். நான் ஐ.பி.எல்.லில் விளையாடும் வரை இந்த அணியிலேயே இருப்பேன். இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன். கடைசியாக, என்னுடைய மடியில் இந்த வெற்றியை தந்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த நிர்வாகம் மற்றும் அணியானது நேர்மையில் சிறந்து விளங்கியது என்று கூறியுள்ளார்.