இன்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

2 months ago 10

ராய்ப்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி சென்ற இன்டிகோ விமானத்தில் 187 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து விமானம் திருப்பிவிடப்பட்டது.

சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விமானத்தை முழுமையாக சோதனை செய்தனர்.

The post இன்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article