இன்ஜி. மாணவர் மாயம்

2 months ago 9

சேலம், நவ.15: சேலம் கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மகபூப்பாட்சா. இவரது மகன் சுஹைல் (21). சேலத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு தனது பைக்கில் புறப்பட்டுச் சென்றார். மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால், கல்லூரி மற்றும் நண்பர்களின் வீடுகளில் சுஹைலை பெற்றோர் தேடினர். ஆனால் அவரை எங்கும் காணவில்லை. இதுபற்றி மாணவனின் தந்தை மகபூப்பாட்சா, சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவன் சுஹலை தேடி வருகின்றனர்.

The post இன்ஜி. மாணவர் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article