
இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவோங்குடன் மோதினார்.
1 மணி 18 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் சோச்சுவோங்கிடம் தோல்வியடைந்தார். தோல்வி குறித்து பேசிய பி.வி. சிந்து, "மூன்றாவது செட்டில் நான் 16-13 என முன்னிலையில் இருந்தேன். அதை நான் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனால் ஒட்டுமொத்தமாக எனது ஆட்டத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த போட்டியிலிருந்தும் இந்த தொடரிலிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறினார்.