
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை, உக்ரைனின் போலினோ புரோவா-யெவ்ஹினியா கன்டிம் ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-14, 22-20 என்ற நேர்செட்டில் உக்ரைனின் போலினோ புரோவா-யெவ்ஹினியா கன்டிம் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.