இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமிடம் போலீஸார் விசாரணை!

2 months ago 10

கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி, கடந்த 14-ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் பாஜக சார்பில் புஷ்பாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்திருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த 17-ம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பப்பட்டார்.

Read Entire Article