கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி, கடந்த 14-ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் பாஜக சார்பில் புஷ்பாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த 17-ம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பப்பட்டார்.