இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கேப்டன் விலகல்

3 hours ago 2

லண்டன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் விலகியுள்ளார். காயம் காரணமாக 3-வது போட்டியை தவறவிட்ட அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

3-வது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட டாமி பியூமாண்ட் எஞ்சிய தொடர் முழுவதும் கேப்டனாக செயல்பட உள்ளார். நாட் ஸ்கைவர்-பிரண்டுக்கு மாற்று வீரராக மாயா பவுச்சியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Nat Sciver-Brunt will miss the rest of the Vitality IT20 series against India due to the injury to her left groin she sustained in Bristol. Tammy Beaumont will continue to captain in her absence, with Maia Bouchier replacing Sciver-Brunt in the squad. Sciver-Brunt is expected… pic.twitter.com/It4XBfPpMA

— England Cricket (@englandcricket) July 5, 2025
Read Entire Article