இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி: 7 பேர் பலி..!

1 day ago 6

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரனோ பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கேரள மாநிலம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.

The post இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி: 7 பேர் பலி..! appeared first on Dinakaran.

Read Entire Article