இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் திகழ்கிறார்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

3 hours ago 1

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார். இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்கு சென்றார்.

10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர். இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Proud of our very own @DGukesh for finishing third at #NorwayChess2025 with an impressive 14.5 points.

With remarkable talent and determination, Gukesh continues to shine as a symbol of India's chess future. https://t.co/RlZ5B1rx7b

— M.K.Stalin (@mkstalin) June 7, 2025

Read Entire Article