இந்தியா ஏ அணியில் கருண் நாயர் உள்ளிட்ட 5 வீரர்களுக்கு வாய்ப்பு..?

18 hours ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஏ அணி வரும் 13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், தனுஷ் கோட்டியான், பாபா இந்திரஜித், ஆகாஷ் தீப் உள்ளிட்ட 5 வீரர்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக அசத்தும் பட்சத்தில் இதில் சில வீரர்கள் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article