தர்மபுரி, ஜன.19: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படையில் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக வரும் 27ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் மார்ச் 22ம்தேதி இணைய வழியில் தேர்வு நடைபெறும். எனவே, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் இருபால் (ஆண், பெண்) கல்லூரி மாணவர்கள் ஆகியோர், இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post இந்திய விமான படைக்கு ஆட்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.