'இடுப்பை காட்டுவதற்கு ரூ.5,000...' ஆன்லைன் பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்த இளம்பெண்

1 week ago 9

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த சுபாங்கி பிஸ்வாஸ் என்ற இளம்பெண், ஆன்லைன் வாயிலாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் குறித்து 'லிங்க்ட்-இன்' தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"நான் ரூ.5,000 தருகிறேன்.. உனது இடுப்பை எனக்கு காட்டு. இதுசென்னையை சேர்ந்த ஆசிக் நேரு என்ற நபர், வேலைவாய்ப்பு தருவதாக கூறி நள்ளிரவு 2 மணிக்கு எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. அந்த நபரின் முகப்பு பக்கத்தில் அவர் ஒரு தொழில் நிறுவனத்தின் இயக்குநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. தொழில்துறையை சேர்ந்த பெண்கள் பலர் சந்திக்கும் பிரச்சினை இது. எனது தொழில், எனது உடல் மற்றும் எனது நேரத்தை நான் மதிக்கிறேன். நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. எனவே, ஆசிக் நேரு என்ற நபரின் விவரங்களை வெளிப்படையாக குறிப்பிடுகிறேன். எனது சுயமரியாதையை ஒருபோதும் இழக்க மாட்டேன்."

இவ்வாறு சுபாங்கி பிஸ்வாஸ் கூறியுள்ளார். மேலும் ஆசிக் நேரு என்ற நபர் தனக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக பேசியது துணிச்சலான செயல் என்று கூறி சுபாங்கிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், பெண்கள் சிலர் இதே போல் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். 

Read Entire Article