எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் இடிந்து 3 மாதங்களாகியும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளது. எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இக்கட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, பாரதியார் பிறந்த இல்லத்தை அரசு சார்பில் விலைக்கு வாங்கி, அதனை நினைவில்லமாக அறிவித்து திறந்துவைத்தார். இந்த இல்லத்தை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 6 மணி வரையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வந்தனர்.