இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் சாய் சுதர்சன் ?

5 hours ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் நியமிக்க வேண்டி உள்ளது.இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது . இது தொடர்பாக பிசிசிஐ இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறது . ஆலோசனைக்கு பிறகு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கருண் நாயர் பெயரும் பரிசீலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Read Entire Article