இங்கிலாந்துக்கு எதிராக என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் சுப்மன் கில்

2 hours ago 1

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் போட்டி முடிந்து அளித்த பேட்டியில் ஆட்ட நாயகன் சுப்மன் கில் பேசியது பின்வருமாறு:- "களத்தில் நான் நேர்மறையாக இருக்க முயற்சித்தேன். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவி இருந்தது. அதனால் நல்ல ஷாட்டுகளை அடிப்பது மட்டுமே எனது திட்டமாக இருந்தது. ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடியது உதவிகரமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் வீசும்போது பிட்ச் கொஞ்சம் இருதலைபட்சமாக இருந்ததாக நினைக்கிறேன்.

துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் எனது பேட்டிங் பெரிதாக மாறவில்லை. ஆனால் களத்தில் போட்டியை பற்றிய சிந்தனைகளை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். அதே போல ரோகித் பாய் என்ன நினைக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவருக்கு எனது உள்ளீடுகளையும் கொடுக்க முயற்சிக்கிறேன். போட்டியை பற்றி ஏதேனும் சொல்ல விரும்பினால் கொஞ்சமும் தயங்காமல் சொல்லுங்கள் என்று ரோகித் என்னிடம் கேட்டுக் கொண்டார்" என கூறினார்.

Read Entire Article