
லண்டன்,
இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியமான லூடன் கிரவுன் நகர சாலை எப்போதும் பரபரப்பாக காணப்டும். கடந்த ஆண்டு அந்த சாலையில் மக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு நடந்து சென்றவர்களிடம் சகோதரர்கள் 2 பேர் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை போலீசார் தட்டிக் கேட்க முயன்றபோது அந்த நபர்கள் போலீசாரையும் கத்தியால் தாக்கினர். இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லூடன் கிரவுன் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.