ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்: விசாரணை ஆக.13-க்கு ஒத்திவைப்பு

6 hours ago 1

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Read Entire Article