திருச்சி, பிப். 14: திருச்சி தில்லைநகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆழ்வார்தோப்பு பகுதியில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டதில் ஆழ்வார் தோப்பு தென்னூர் பகுதியை சேர்ந்த மாலிக் பாஷா (26) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து மாலிக்பாஷாவை கைது செய்து, அவரிடம் இருந்து 9 மது பாட்டில்கள், டூ வீலர் 1 மற்றும் ₹.500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post ஆழ்வார்தோப்பு பகுதியில் திருட்டுத்தனமாக மதுவிற்றவர் கைது appeared first on Dinakaran.