“ஆளுநர் மீது அவதூறு பரப்புகிறது திமுக அரசு” - கிருஷ்ணசாமி விமர்சனம்

4 months ago 10

சென்னை: “சட்டசபையில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என ஜனநாயக முறையில்தான் ஆளுநர் கேட்டுள்ளார். ஆனால், திமுக அரசு, ஆளுநர் மீது அவதூறு பரப்பி பொய் பிரச்சாரம் செய்கிறது. ஆளுநரை தரக்குறைவாக பேசும் திமுகவினரின் செயல் கண்டிக்கத்தக்கது” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக மக்கள் பொங்கல் விழாவை புகையில்லா பொங்கலாக கொண்டாட வேண்டும். தமிழகத்தில் போகி பண்டிகை பெரிதளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் பழைய பொருள்கள் அதிகமாக எரிக்கப்படுகிறது.இதனால், தமிழக முழுவதும் சுற்றுசூழல் மாசு உண்டாகிறது. எனவே, போகிப் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் பழைய டயர், குப்பைகளை எரிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

Read Entire Article