ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாநாட்டில் இருந்து சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு

4 months ago 13

பீகார்: ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாநாட்டில் இருந்து சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். 85-வது அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்று வருகிறது,. ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநாட்டில் பேச முடியவில்லை என்றால், வேறு எங்கு பேசுவது என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு ஆளுநர் குறித்து பேசக்கூடாது என அறிவுறுத்தினார். ஆளுநர் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியது நிகழ்ச்சி குறிப்பில் பதிவாகாது என மாநிலங்களவை துணை தலைவர் அறிவித்துள்ளார்.

The post ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாநாட்டில் இருந்து சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு appeared first on Dinakaran.

Read Entire Article