ஆளுநரை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை: தமிழிசை விமர்சனம்

5 months ago 15

சென்னை: ஆளுநரை பற்றிப்பேச துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் தனியார் பள்ளிகளில், எத்தனையோ பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதே அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று மொழியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதைக்கேட்டால் இந்தி திணிப்பு என்கின்றனர். அதேபோல் வள்ளுவரின் கருத்துக்கள் அனைவருக்கும் சமமானது. அவர் வாழ்ந்த காலத்தில் திருவள்ளுவரின் ஆடை அலங்காரம் ஞானியை போலத்தான் இருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது.

Read Entire Article