ஆற்றில் மூழ்கி பலியானதாக கருதி தகனம் முதியவர் திரும்பி வந்ததால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி: இறந்தவர் யார் என்ற குழப்பத்தில் போலீசார்

4 months ago 10

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலப்பாதி கிராமத்தில் கடந்த மாதம் 22ம் தேதி அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் காவிரி ஆற்றில் மிதந்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோயில் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாயமான செம்பனார்கோயில் அருகே மருதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (62) என்பவர் தான் ஆற்றில் மூழ்கி இறந்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை, செல்வராஜின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களும் அந்த உடலை எடுத்து சென்று இறுதி காரியங்களுக்கு பிறகு தகனம் செய்துள்ளனர். இந்நிலையில் வேலைக்காக ஈரோடு சென்ற செல்வராஜ் அங்கு வேலை கிடைக்காததால் கடந்த 3ம் தேதி ஊர் திரும்பி உள்ளார். இதனால் கிராமமே அதிர்ச்சி அடைந்துள்ளது. தகவலறிந்த செம்பனார்கோயில் போலீசார், இறந்துவிட்டதாக கருதிய செல்வராஜ் திரும்பி வந்ததால் சம்பவத்தன்று ஆற்றில் இறந்து கிடந்தவர் யார் என்ற குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post ஆற்றில் மூழ்கி பலியானதாக கருதி தகனம் முதியவர் திரும்பி வந்ததால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி: இறந்தவர் யார் என்ற குழப்பத்தில் போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article