கோவை: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் இன்று கோவை வந்தார். பேரூரில் நாளை நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கார் மூலமாக கோவைப்புதூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூர் நாச்சிகோனார் தோட்டத்திற்கு சென்றார். இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை பேரூர் ஆதீன மடத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.