
சென்னை,
மத்திய அரசின் அலுவல் மொழி கொள்கையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, ஆர்இசி நிறுவனம், ராஜ்பாஷா தீப்தி விருதை பெற்றுள்ளது. மத்திய மின்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆர்இசி நி நிறுவனம், மின்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதியுதவி அளித்து வருகிறது
இந்த நிறுவனம், அலுவல் மொழியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ராஜ்பாஷா தீப்தி விருதை பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்இசி நி தலைமை மேலாண் இயக்குநர் ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா, அலுவல் மொழி பிரிவு நிர்வாக இயக்குநர் ஆர்.பி.வைஷ்ணவ் ஆகியோரிடம் மத்திய மின்சாரத் துறை மந்திரி மனோகர் லால் விருதை வழங்கி கவுரவித்தார்.