ஆரியம் - திராவிடம் இன கோட்பாடு உண்மையா, பொய்யா? - மத்திய, மாநில அரசு முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு

8 months ago 22

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்தமனுவில், ‘‘ஆரியன், திராவிடன் என உலகில் இரு மனித இனங்கள் உள்ளன எனக் கூறி மக்களை பாகுபாடு செய்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி எந்தவொரு இனக்குழுக்களும், இனக்கோட்பாடும் இல்லை. இரண்டுமே தவறானது.

ஆனால் தமிழக அரசு மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் விதமாக இந்த பொய் பிரச்சாரத்தை பாடநூல்களி லும் வைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டும். எனவே ஆரியம், திராவிடம் என்ற பாடத்தை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். அத்துடன் மக்களிடம் பாகுபாடு காட்டியதற்காக அரசு மன்னிப்பு கோரவும், இதுபோன்ற பிரச்சாரத்தை இனிமேல் முன்னெடுக்கக்கூடாது எனவும்உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

Read Entire Article